யாழில் திடீர் சுகவீனம் ஏற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் (03)
உயிரிழந்துள்ளார்.
உடுவில் – மல்வம் பகுதியை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சின்ராசா
(வயது 53) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குடும்பஸ்தர் உயிரிழப்பு
இவருக்கு கடந்த 02ஆம் திகதி மலத்துடன் இரத்தம் வெளியேறியது. பின்னர் 03ஆம்
திகதி அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே
உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார்.
குழந்தை உயிரிழப்பு
இதேவேளை யாழில் பிறந்து 5 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று கடந்த 1ஆம் திகதி
உயிரிழந்துள்ளது.பண்டத்தரிப்பு – சாந்தையை சேர்ந்த ஜெயந்தன் வினிஸ்ரலா என்ற
தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குழந்தை கடந்த 28ஆம் திகதி பிறந்துள்ளது. பின்னர் கடந்த 01ஆம் திகதி உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார்.
சுவாசக்குழாயிலும், இருதயத்திலும் ஏற்பட்ட வியாதி
காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
