Home இலங்கை சமூகம் மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்

0

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில்  இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தானது நேற்று(14) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் மாங்காட்டில் துவிச்சக்கர வண்டியுடன்
மோட்டார் சைக்கிள் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் துவிச்சக்கர வண்டியிலும்
பயணித்தவரும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார்
முன்னெடுத்து வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version