Home இலங்கை சமூகம் நீரில் மூழ்கி இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு

நீரில் மூழ்கி இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு

0

நீர்கொழும்பில் (Negombo) கடலில் நீராடச் சென்ற இரண்டு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி
உயிரிழந்துள்ளனர்.

நீர்கொழும்பு பகுதியில் உள்ள தமிழ் பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி பயிலும்
இரண்டு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

6 மாணவர்கள் நேற்று (14) கடலுக்குச் சென்றிருந்த நிலையில், அவர்களில் இருவரே
உயிரிழந்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை

சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version