Home இலங்கை அரசியல் டயானா கமகே வழக்கிலிருந்து விலகிய நீதிபதிகள்

டயானா கமகே வழக்கிலிருந்து விலகிய நீதிபதிகள்

0

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே (Diana Gamage) வழக்கில் இருந்து இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள்  (Supreme Court of Sri Lanka) விலகியுள்ளனர்.

டயானா கமகே நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகக் கூறி வெலிகம மாநகர சபையின் முன்னாள் தலைவர் ரெஹான் ஜயவிக்ரமவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற விசாரணை

இந்த மனு நேற்று (26) பிரிதி பத்மன் சூரசேன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, ​​இந்த மனுக்களை பரிசீலனை செய்வதிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக, சம்பந்தப்பட்ட பெஞ்சின் அங்கத்தவர் நீதிபதிகளாக கடமையாற்றிய குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அறிவித்துள்ளனர்.

அதன்படி, இந்த மனுவை ஆகஸ்ட் 5-ம் திகதி பரிசீலிக்க உச்சநீதிமன்றம் திகதியை நிர்ணயம் செய்தது.

NO COMMENTS

Exit mobile version