Home இலங்கை குற்றம் யாழில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது

யாழில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது

0

வெளிநாட்டில் வசித்துவரும் ஒருவருக்குச் சொந்தமான காணியை, யாழ்ப்பாணத்தில் ஆள்மாறாட்டம் செய்து
உரிமை மாற்றம் செய்த சகோதரி உட்பட இரண்டு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் புலம்பெயர்ந்து வெளிநாடொன்றில் வசித்து
வரும் நிலையில். அவர் தனது காணிக்கான அற்றோனித்தத்துவ அதிகாரத்தை தனது ஒன்றுவிட்ட
சகோதரிக்கு வழங்கியிருந்தார்.

காணி மோசடி

இந்த நிலையில், காணி உரிமையாளரின் சொந்தச்
சகோதரி பிறிதொரு தேவையைக் காரணம் காட்டி ஒன்றுவிட்ட சகோதரியிடமிருந்து
உறுதியைப் பெற்றுச்சென்று மோசடியாக உரிமை மாற்றம் செய்துள்ளார்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி
குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய
விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், காணி மோசடி செய்த சகோதரியைக் கைது செய்தனர்.

அவர் ஆள்மாறாட்டம் செய்வதற்கு உதவிய பிறிதொரு பெண்ணும் கைதுசெய்யப்பட்டார்.
இவரும் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான்
ஆனந்தராஜாவின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது, 10 ஆயிரம் ரூபாவுக்காகவே
தான் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக  குற்றஞ்சாட்டப்பட்ட
பெண் ஒப்புக்கொண்டார்.

நீதிமன்ற உத்தரவு

இதையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவர்கள் இருவரும்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆள்மாறாட்டத்துக்குத் துணைபோன பெண் (10 ஆயிரம் ரூபாவுக்காக கையொப்பம்
வைத்தவர்) கொழும்பைச் சேர்ந்தவர் என்றும், சுன்னாகத்தில் தற்காலிகமாக
வசித்தபோதே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், சட்டத்தரணியின் முன்னிலையில்
கையொப்பம் வைத்தபோது தான் நோய்வாய்ப்பட்டுள்ளதாகத் தெரிவித்து மாஸ்க்
அணிந்திருந்தார் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version