Home இலங்கை சமூகம் காவல்துறை அதிகாரியால் பறிபோன இரண்டு பெண்களின் உயிர்

காவல்துறை அதிகாரியால் பறிபோன இரண்டு பெண்களின் உயிர்

0

காவல்துறை அதிகாரி ஒருவர் செலுவத்திவந்த வான் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்ததுடன் மூன்று வயது குழந்தையொன்று படுகாயமடைந்துள்ளது.

எப்பாவல காவல்துறை பிரிவிற்குட்பட்ட தலாவ – கெக்கிராவ வீதியில் கடியாவ சந்திக்கு அருகில் இன்று(04) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 குழந்தை அனுராதபுரம் வைத்தியசாலையில்

இதில் மாலுலாவ கல்கமுவ பிரதேசத்தை சேர்ந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த 38 மற்றும் 58 வயதுடைய இரு பெண்களே உயிரிழந்தவர்களாவர்.

படுகாயமடைந்த குழந்தை அனுராதபுரம்(anuradhapura) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நித்திரை கலக்கம்

வானை செலுத்தி வந்த காவல்துறை உத்தியோகத்தருக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதால், வான் வீதியை விட்டு விலகி எதிர்த் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட காவல்துறை சார்ஜன்ட் அனுராதபுரம் காவல் நிலையத்தில் கடமையாற்றுபவர் என தெரியவந்துள்ளது.

எப்பாவல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version