Home இலங்கை சமூகம் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழப்பு

நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழப்பு

0

அநுராதபுரம், – கஹட்டகஸ்திகிலிய, இஹல கங்ஹிடிகம ஏரியில் நீராடச்சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 24 மற்றும் 34 வயதுடைய பொல்கஹவெல மற்றும் பூஜாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் நேற்று (20) மாலை மேலும் இருவருடன் மதுபானம் அருந்திவிட்டு மேல் கங்ஹிடிகம ஏரியில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

பிரேத பரிசோதனை

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

 

 

NO COMMENTS

Exit mobile version