Home உலகம் ரஷ்யாவிற்குள் ஊடுருவியுள்ள உக்ரைன் விதித்துள்ள புதிய நிபந்தனை

ரஷ்யாவிற்குள் ஊடுருவியுள்ள உக்ரைன் விதித்துள்ள புதிய நிபந்தனை

0

போர் அமைதிக்கு ரஷ்யா(Russia) சம்மதம் தெரிவித்தால் ஊடுருவலை நிறுத்துவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் (Ukraine) – ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்துக்கொண்டிருக்கையில் அண்மையில் ரஷ்யாவிற்குள் உக்ரைன் படைகள் ஊடுருவியது.

உக்ரைனிய படைகளின் இந்த ஊடுருவல் காரணமாக கிட்டத்தட்ட 120000க்கும் மேற்பட்ட மக்கள் குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த பகுதியில் அவசர நிலையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன்  ஊடுருவல்

இரண்டாம் உலக போருக்கு பிறகு ரஷ்ய நிலப்பரப்பிற்குள் நடந்த மிகப்பெரிய ஊடுருவலாக இது பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ரஷ்யா போர் அமைதிக்கு ஒப்புக் கொண்டால், ரஷ்யாவில் உக்ரைனிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை கைவிட தயாராக இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் Georgiy Tykhy தெரிவித்த தகவலில், போர் அமைதிக்கு ரஷ்யா எவ்வளவு விரைவாக சம்மதம் தெரிவிக்கிறதோ, அவ்வளவு விரைவாக ரஷ்யாவிற்குள் உக்ரைனிய பாதுகாப்பு படைகளின் தாக்குதல் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நிபந்தனை

எனினும், ரஷ்யாவுக்குள் (Russia) ஊடுருவி வரும் உக்ரைனிய (Ukraine) படைகளுக்கு எதிராக தீவிர எதிர்ப்பு தாக்குல்களை ரஷ்ய படைகள் மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னிணியில், குர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியுள்ள உக்ரைனிய வீரர்களுக்கும் ரஷ்ய படைகளுக்கும் இடையில் நடந்து வரும் சண்டையில் இதுவரை 420 உக்ரைனிய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இதேவேளை, குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படைகளால் ஏவப்பட்ட 4 ஏவுகணைகளை ரஷ்யா தாக்கி அழித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version