Home முக்கியச் செய்திகள் உமா ஓயா :பெண் தொழிலாளர்கள் இருவருக்கு அளிக்கப்பட்ட கௌரவம்

உமா ஓயா :பெண் தொழிலாளர்கள் இருவருக்கு அளிக்கப்பட்ட கௌரவம்

0

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் (UOMDP) நிர்மாணத்தின் போது இரண்டு பெண் தொழிலாளர்கள் ஆற்றிய சேவைக்கு மதிப்பளித்து உமா ஓயா நீர்மின்சார வளாகத்தில் உள்ள இரண்டு மின்பிறப்பாக்கிகளுக்கு அவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

இரண்டு மின்பிறப்பாக்கிகள் ‘டசுனி’ மற்றும் ‘சுலோச்சனா’ என்று பெயரிடப்பட்டுள்ளன.சுலோச்சனா என்ற பெயர் ஈரானிய உச்சரிப்பாகும்.

இரண்டு பெண் தொழிலாளர்களும்

கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள பொறியியலாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பானங்கள் மற்றும் பிற வேலை ஆதரவை வழங்கியதற்காக இரண்டு பெண் தொழிலாளர்களும் இதன்மூலம் கௌரவிக்கப்பட்டனர்.

எல்ல-கரந்தகொல்ல பிரதேசத்தில் உள்ள உமா ஓயா நீர்மின்சார வளாகத்தில் நிறுவப்பட்டு இரண்டு பெண்களின் பெயரிடப்பட்ட இரண்டு விசையாழிகளும் 120 மெகாவொட்களை தேசிய மின் கட்டத்திற்கு வழங்கும்.

2025 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க விசா : விண்ணப்பதாரர்களை தெரிவு செய்யும் பணி ஆரம்பம்

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம்

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கைக்கு வருகை தந்துள்ள ஈரான் அதிபர் கலாநிதி இப்ராஹிம் ரைசி ஆகியோரால் கூட்டாக இன்று(24) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மகாவலி அபிவிருத்தித் திட்டத்தைத் தொடர்ந்து உமா ஓயா திட்டம் இலங்கையின் பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களில் ஒன்றாகும்.

16 ஆண்டுகளின் பின்னர் இலங்கை வந்த ஈரான் அதிபர்! ரணிலுடன் இடம்பெற்ற சந்திப்பு

நாட்டின் தென்கிழக்கு வறண்ட பிரதேசத்தில் உள்ள நீர்ப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே இதன் முதன்மை நோக்கமாகும். வருடாந்தம் சராசரியாக 145 மில்லியன் கன மீட்டர் (MCM) உபரி நீரை உமா ஓயா படுகையில் இருந்து கிரிந்தி ஓயா படுகைக்கு திருப்பி விடுவது ஆகும். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version