Home முக்கியச் செய்திகள் பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை: கவலை வெளியிட்டுள்ள ஐநா

பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை: கவலை வெளியிட்டுள்ள ஐநா

0

பங்களாதேஷில் (Bangladesh) வாழும் இந்துக்களுக்கு எதிராகப் பரவலாக வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளமைக்கு  ஐக்கிய நாடுகள் சபை (United Nations) கவலை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பங்களாதேஷில் உள்ள இந்துக்களைப் பாதுகாக்க முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

தாக்குதல் சம்பவங்கள்

இதேவேளை, பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்கு எதிராகக் கண்டன பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் இந்து, பௌத்த, கத்தோலிக்க ஒற்றுமை குழுவொன்று இந்த பேரணியினை ஏற்பாடு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் (Bangladesh) ஷேக் ஹசீனா (Sheikh Hasina) அரசு கவிழ்ந்ததன் பின்னர் அங்கு கடந்த சில நாட்களில் மாத்திரம் சிறுபான்மையினர் மீது 205 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/un-concerned-over-violence-in-bangladesh-1723487982?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version