Home இலங்கை அரசியல் செம்மணியை அதிர வைத்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

செம்மணியை அதிர வைத்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

0

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் கடந்த சில நாட்களுக்கு முன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி யாழ். வளைவுக்கு அருகில் மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்ட ”அணையா விளக்கு” போராட்ட களத்திற்கு நேரில் சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஏற்றப்பட்ட  அணையா தீபத்திற்கு முன்பாக மலர் தூவி அஞ்சலியும் செலுத்தினார்.

இந்நிலையில் களமுனைக்கு ஆணையாளர் வோல்கர் டர்க் நேரடியாக கலந்து கொண்டமை மற்றும் அஞ்சலி செலுத்தியமை என்பது போராட்ட களத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவிக்கையில்….

NO COMMENTS

Exit mobile version