ரஷ்ய பாதுகாப்புப் படையினரின் காவலில் உள்ள பாதாள உலகக் குற்றவாளியான ரொட்டும்ப அமிலவுக்கு எதிராக தற்போது ரஷ்ய நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கு டியும் வரை அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்டர்போல் சிவப்பு அறிவிப்பைத் தொடர்ந்து, குடியேற்றச் சட்டங்களை மீறி ரஷ்யாவிற்குள் நுழைந்த பின்னர் மார்ச் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.
பாதாள உலகத் தலைவர் ரொட்டும்ப அமிலவை ரஷ்ய பாதுகாப்புப் படையினர் கைது செய்ததாக ரஷ்யா மார்ச் மாதம் இன்டர்போல் மூலம் இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
நாடுகடத்தும் செயல்முறை
அவர் கைது செய்யப்பட்டபோது பலர் இருந்த போதிலும், அவர்கள் குறித்து இலங்கைக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
அதன்படி, அந்நாட்டின் குடியேற்றச் சட்டங்களை மீறியதற்காக ரொட்டும்ப அமில தற்போது ரஷ்ய நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறார்.
இந்த நிலையில், அது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது.
எவ்வாறாயினும், ரொட்டும்ப அமிலவை நாட்டிற்கு அழைத்து வரும் செயல்முறை ஏற்கனவே தொடங்கிவிட்டது என்றும், அனைத்து தகவல்களும் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
