Home உலகம் பிரித்தானியாவிலும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்

பிரித்தானியாவிலும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்

0

தமிழர் தாயகத்தில் மட்டுமல்லாது புலம்பெயர் தேசத்திலும் மாவீரர் தினம் மிகவும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

அந்தவகையில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் எனுமிடத்தில் மாவீரர் நினைவேந்தல் தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழீழ நிதித்துறை பொறுப்பாளர் தமிழ்க்குமரன் அல்லது பாலதாஸ் அவர்களின் புதல்விகளான செல்வி அன்பு மொழி , செல்வி அறிவு ஆகியோர் ஏற்றி வைத்தனர். 

இந்நிகழ்வில் பிரித்தானிய தேசத்தில் உள்ள ஈழத்தமிழ் உறவுகள் பெருமளவில் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு தமது அஞ்சலியை செலுத்தினர்.

Source: https://ibctamil.com/article/united-kingdom-maveerar-day-1732718913

NO COMMENTS

Exit mobile version