Home இலங்கை அரசியல் ரணில் தோல்வியடைத்தால் இரண்டு வருடங்களில் மீண்டும் தேர்தல்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ரணில் தோல்வியடைத்தால் இரண்டு வருடங்களில் மீண்டும் தேர்தல்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தால் இரண்டு வருடங்களில், நாடு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராக நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 78ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்விலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

பொருளாதாரம் குறித்த புரிதல்

2024 ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச அல்லது அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றால், இந்த நிலை ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன், பொருளாதாரத்தை நடத்துவது குறித்து அவர்களுக்கு சரியான புரிதல் இல்லாததே இதற்குக் காரணம் எனவும் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18

Source: https://tamilwin.com/article/unp-warning-issued-2024-presidential-election-1725631057

NO COMMENTS

Exit mobile version