Home இலங்கை சமூகம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு : வெளியான வர்த்தமானி

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு : வெளியான வர்த்தமானி

0

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக அதிகரித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலானது தொழில் ஆணையாளர் எம்.கே.கே.எஸ்.ஜயசுந்தரவினால் (M.K.K.S Jayasundara) வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நாளாந்த அடிப்படை வேதனமாக 1350 ரூபாவும் மற்றும் உற்பத்தி அடிப்படையிலான ஊக்குவிப்பு கொடுப்பனவாக 350 ரூபாவுமாக 1700 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல்

இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் காணப்படுமாயின் அதற்கான காரணங்களுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி மதியம் 12 மணிக்கு முன்னர் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து முன்னதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.

இதனையடுத்து, குறித்த வர்த்தமானி அறிவித்தல் மீளப் பெறப்பட்டதுடன் வேதன நிர்ணய சபையில் நேற்று முன்தினம் (12)  எட்டப்பட்ட தீர்மானத்துக்கு அமைய தற்போது புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version