14 வயது 272 நாட்களில், இந்திய ஆண்கள் கிரிக்கெட் வரலாற்றில் லிஸ்ட் ஏ போட்டியில் சதம் அடித்த இளம் வீரராக வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனை படைத்துள்ளார்.
2025–26 விஜய் ஹசாரே கோப்பை தொடக்க நாளில், பீகார் அணிக்காக அருணாசலப் பிரதேசத்திற்கு எதிராக விளையாடிய அவர், வெறும் 36 பந்துகளில் சதம் கடந்துள்ளார்.
ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம்
மேலும், 59 பந்துகளில் 150 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக 150 என்ற சாதனையையும் அவர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
84 பந்துகளில் 190 ஓட்டங்கள் குவித்த அவர், 16 நான்குகள் மற்றும் 15 ஆறுகள் என விளாசி கிரிக்கெட் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
உலகக் கோப்பை அணியில் வாய்ப்பு
ஏற்கனவே ஐபிஎல், எண்டர்-19 ஆசியக் கோப்பை மற்றும் இளைஞர் ஒருநாள் போட்டிகளில் பல சாதனைகள் படைத்துள்ள சூர்யவன்ஷி, 2026 எண்டர்-19 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
2025 ஆண்டு முழுவதும் அதிரடியான ஆட்டத்தால் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இவர், இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரமாக உருவெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
