Home ஏனையவை ஆன்மீகம் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு

0

Courtesy: Shanmugam Thavaseelan

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன்
ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த பொங்கல் உட்சவத்திற்கு முன்னர் முதல் திங்கள் பாக்குத் தெண்டல்
இரண்டாவது திங்கள் உப்பு நீரில் விளக்கெரியும் அதிசயமான நிகழ்வுக்காக
அம்மனுக்கு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வும் இறுதி மூன்றாவது திங்கள் வைகாசிப்
பொங்கல் விழாவும் இடம்பெறும்.

இந்த சடங்கு முறையில் இரண்டாவது திங்கள் கிழமையான நேற்றைய நாளில் தீர்த்தம்
எடுக்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

பாரம்பரிய வழிகள்

காட்டு விநாயகர் ஆலயத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளை
தொடர்ந்து தீர்த்தக்குடம் பாரம்பரிய வழிகள் ஊடாக முல்லைத்தீவு
தீர்த்தக்கரைக்கு எடுத்து செல்லப்படும்.  

தொடர்ந்து, முல்லைத்தீவு பெருங்கடலில் தீர்த்தம்
எடுக்கப்பட்டு மீண்டும் பாரம்பரிய வழிகள் ஊடாக காட்டுவிநாயகர் ஆலயத்தை
சென்றடைந்து அங்கு உப்புநீரில் விளக்கெரியும் அற்புதம் இடம்பெறும்.

மேலும், எதிர்வரும் 08ஆம் திகதி அன்று காட்டுவிநாயகர் ஆலய பொங்கல் விழா இடம்பெற்று, 09ஆம் திகதி திங்கள் வைகாசி பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version