Home ஏனையவை ஆன்மீகம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

0

முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை
கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் உற்சவம் நேற்றையதினம் (09.06.2025) மிகச்
சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

இந்த பொங்கல் உற்சவத்தில் பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் ஒன்று
பதிவாகியுள்ளது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் நேற்று வெகு விமர்சையாக
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மிகச் சிறப்பான முறையில்
நடைபெற்றிருந்தது.

இந் நிலையில் அங்கு பெண் அடியார்கள் தூக்குக் காவடி எடுத்து
தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றியிருந்தனர்.

இந்த விடயம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/vattrapalai-women-carry-kavadi-at-pongal-fest-1749534838

NO COMMENTS

Exit mobile version