Home ஏனையவை ஆன்மீகம் முத்து சப்பை இரதத்தில் வீதியுலா வந்த பேச்சியம்பாள்

முத்து சப்பை இரதத்தில் வீதியுலா வந்த பேச்சியம்பாள்

0

Courtesy: Sajithra

அராலி மேற்கு வட்டுக்கோட்டை நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள்
ஆலயத்தின் முத்துச் சப்பை இரத திருவிழா நேற்றையதினம் (22.03.2024) வெகு சிறப்பாக நடைபெற்றது.

மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் பேச்சியம்மாளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும்
விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து, வசந்த மண்டபத்தில்
எழுந்தருளியாக வீற்றிருக்கும் பேச்சியம்மாளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

விசேட பூஜை

பின்னர் பேச்சியம்மாள் முத்துச் சப்பை இரதத்தில் ஏறி வீதியுலா வந்து
பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து நாத சங்கமம் இசைக்
கச்சேரியும் இடம்பெற்றது.

அத்துடன், கிரியைகளை துஷ்யந்தக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி
வைத்ததோடு பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் அம்பாளை தரிசித்தனர்.

NO COMMENTS

Exit mobile version