Home ஏனையவை ஆன்மீகம் திருகோணமலையில் கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை

திருகோணமலையில் கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை

0

ஜேசு பிரானின் பிறப்பினை சிறப்பிக்கும்
கிறிஸ்மஸ் பிறப்பினை முன்னிட்டு நள்ளிரவு ஆலயங்களில் விசேட வழிபாடுகள்
நடைபெற்றன.

திருகோணமலை, மூதூர் – இருதயநாதர் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை பலத்த
பாதுகாப்பிற்கு மத்தியில் சிறப்பாக நடைபெற்றிருந்தது. தேவாலயத்தின்  அருட்தந்தை அமல்ராஜ் ஆராதனை நிகழ்வை நடத்தியிருந்தார்.

ஆராதனை

இதன்போது ஜேசு பிறப்பினை குறிக்கும் வகையில் பாலன் பிறப்பு கொட்டில்
திறக்கப்பட்டு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ்
ஆராதனைகள் நடைபெற்றதுடன் கரோல் கீதங்களும் பாடப்பட்டன.

இதன்போது நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிர்நீத்தவர்களின்
ஆத்மசாந்திக்காகவும், பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து விரைவாக மீட்சி பெறவும், நாட்டில் நீடித்த அமைதி மற்றும் மகிழ்ச்சி நிலவவும் விசேட பிரார்த்தனையும்
ஆயரினால் நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் விசேட கூட்டுத்திருப்பலியை ஆலயத்தின் பங்குத்தந்தை
மற்றும் அருட்தந்தையர்கள், ஆயர் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.

பலப்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு

திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும்
அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது. நள்ளிரவு ஆராதனையில் அதிகளவான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். 

அதேவேளை தேவாலயத்தின் நுழைவாயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததோடு
சோதனை நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

Source: https://tamilwin.com/article/christmas-midnight-mass-in-trincomalee-1766651045

NO COMMENTS

Exit mobile version