Home இலங்கை சமூகம் வவுனியா – முல்லைத்தீவு இ.போ.சபை பேருந்து சேவை தொடர்பில் பல முறைப்பாடுகள்

வவுனியா – முல்லைத்தீவு இ.போ.சபை பேருந்து சேவை தொடர்பில் பல முறைப்பாடுகள்

0

இ.போ.சபை வவுனியா சாலைக்கு சொந்தமான பேருந்து சேவையில் தமக்கு பல்வேறு குறைப்பாடுகள்
நிலவுவதாக பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கையினையடுத்து வவுனியா மாநகர துணை
முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபனால் உடனடியாக தீர்வு பெற்றுக்
கொடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி செல்லும் இ.போ.சபை வவுனியா சாலைக்கு சொந்தமான பேருந்து தினசரி காலை 6.30 மணிக்கு புறப்படுகின்றது.

உரிய தீர்வு

குறித்த சேவை பேருந்தில் அரச மற்றும் தனியார் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் உட்பட பலர் பயணிப்பதுடன் பேருந்தின் அளவு சிறியதாக உள்ளதாகவும்,
அளவுக்கு அதிகமான பயணிகளை பேருந்தில் ஏற்றுவதாலும் மூச்சுத் திணறல்கள்,
சீண்டல்கள், சுகாதார சீர்கேடுகள் நிலவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவும்
காணப்படுகிறது.

அரச, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இதற்கு
உரிய தீர்வினை பெற்றுத் தருமாறு வவுனியா மாநகரசபை துணை முதல்வரிடம்
கோரிக்கையினை முன்வைத்தனர்.

முதல்வர் வாக்குறுதி

இந்த நிலையில் நேற்றையதினம் (26) இ.போ.சபை வவுனியா சாலைக்கு சென்ற மாநகரசபை துணை
முதல்வர் சாலை முகாமையாளருடன் கலந்துரையாடலை முன்னெடுத்திருந்ததுடன்,
கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றினையும் சாலை முகாமையாளரிடம்
கையளித்திருந்தார்.

இதனையடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை மக்கள் சிரமமின்றி பயணிக்ககூடிய வகையில்
பெரிய பேருந்தினை அனுப்பி வைப்பதாக சாலை முகாமையாளர் உறுதியளித்திருந்தமையுடன்
தமது சாலையின் குறைபாடுகள் மற்றும் தமக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பிலும்
தமது விளக்கத்தினை சாலை முகாமையாளர் வெளிப்படுத்தமையுடன் அதற்குறிய
தீர்வினையும் தன்னால் இயன்றவகையில் பெற்றுத்தருவதாக மாநகர துணை முதல்வர்
வாக்குறுதியளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version