Home இலங்கை குற்றம் வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று மூடல்

வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று மூடல்

0

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று (11) சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

மாநகரசபை சுகாதார பரிசோதகர்களால் இன்று (11) குறித்த உணவகம் மூடப்பட்டுள்ளது.

இந்த உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் புழு
காணப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

சுகாதார சீர்கேடு

இதனையடுத்து, சுகாதார சீர்கேட்டுடன் குறித்த உணவகம் இயங்கியதாகவும்
தெரிவித்து வவுனியா மாநகரசபை பொது சுகாதார பரிசோதகர்களால் நீதிமன்ற
உத்தரவுக்கமைய மூடப்பட்டது.

அத்தோடு, இன்றைய தினத்தில் இருந்து (11.11)  எதிர்வரும் 25 ஆம் திகதி வரை குறித்த உணவகம்
மூடப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் சுகாதார பரிசோதகர்களின்
அறிவுறுத்தலுக்கமைய திருத்த வேவைகளை மேற்கொள்வதற்கு அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version