Home இலங்கை பொருளாதாரம் வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

0

அடுத்த வருடம் முதல் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் என்றாலும், வரியின்றி எந்தவொரு நபருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.

இறக்குமதி தடை நீக்கப்பட்ட பின் உரிமம் பெற்றவர்கள் தங்கள் உரிமத்தின்படி வாகனங்களை இறக்குமதி செய்யலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வாகனங்களை இறக்குமதி

இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் பல கட்டங்களின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதன்படி பொதுபோக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் முதலில் இறக்குமதி செய்யப்படும்.

வர்த்தக மற்றும் சரக்கு வாகனங்கள் இந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்யப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலவச உரிமம்

அனைத்து வகையான வாகனங்களும் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதத்தின் முதலாம் திகதியிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.

அதன்படி, அன்று முதல் முதல் கார்கள், வேன்கள், விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள், பிக்கப்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.

இலவச உரிமத்தின் கீழ் அமைச்சர்கள், எம்.பி.க்கள் அல்லது யாருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது.

சில வரி சதவிகிதம் சேர்க்கப்பட வேண்டும் என்பதே IMF ஒப்பந்தம். அந்த உடன்படிக்கைக்கு இலங்கை அரசாங்கம் உடன்படுகிறது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version