தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வெள்ளத்தின் வேகம் காரணமாக, மாத்தளை – மொரகஹகந்த லக்கல பாலமும் இடிந்து விழுந்துள்ளது.
மேலும், முச்சக்கர வண்டிகள், பேருந்துகள் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வானிலை ஆய்வுத் துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பொதுமக்கள் முடிந்தவரை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.
விபத்து நடந்த இடத்தைப் பார்வையிடுவதைத் தவிர்க்கவும் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
