Home இலங்கை அரசியல் தமிழரின் பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது: வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு

தமிழரின் பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது: வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு

0

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் நிலத்திற்காக நாங்கள் போராடி வரும் நிலையில் இயற்கை
வளங்களும் தமிழர்களின் பொருளாதாரமும் திட்டமிட்டு
அழிக்கப்படுவதாக பொத்துவில் – பொலிகண்டி மக்கள் எழுச்சி
இயக்கத்தின் இணைப்பாளர் வேலன் சுவாமிகள் (Velan Swamigal) தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு ( Batticaloa) – மயிலத்தமடு, மாதவனை பகுதி கால்நடை பண்ணையாளர்களால் நேற்று (09.07.2024) மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், “அனைவரும் ஓரணியாக ஒன்றிணைந்து மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு ஆதரவாக
போராடி வருகின்றனர். 

அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருவதை தமிழினம் சார்பில் முக்கியமான ஒரு விடயமாக
பார்க்க வேண்டும்.

தமிழர்களின் பொருளாதாரம் அழிக்கப்படுவதன் தொடர்ச்சியே மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பிலும்
நடைபெற்று வருகின்றது” என சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் அவர் தெரிவிக்கையில், 

Source: https://tamilwin.com/article/velan-suvamigal-speech-in-batticaloa-1720591195

NO COMMENTS

Exit mobile version