Home இலங்கை குற்றம் சாகல ரத்நாயக்கவின் உயரடுக்கு வாகன தொடரணியை காணொளி எடுத்த இளைஞருக்கு நேர்ந்த கதி

சாகல ரத்நாயக்கவின் உயரடுக்கு வாகன தொடரணியை காணொளி எடுத்த இளைஞருக்கு நேர்ந்த கதி

0

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க பயணித்த வாகனத் தொடரணியை காணொளி எடுத்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயரடுக்கின் வாகன தொடரணி

கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கையடக்கத் தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொத்துவில் பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய நபருடன் குறித்த இளைஞன் ஐக்கிய அரபு இராச்சிய தூதரகத்திற்கு வந்திருந்த போது உயரடுக்கின் வாகன தொடரணியை காணொளி எடுத்துள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version