தமிழ் தேசியத்திற்காக போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நினைவுகூர்ந்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை இட்டுள்ளார்.
குறித்த பதிவில், “தீரத்துடன் களமாடிய மாவீரர்களை வணங்குவோம்,
தியாக தீபங்களின் நினைவைப் போற்றுவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழர் தாயகங்களிலும் பெருந்திரள் மக்களுடன் றினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தீரத்துடன் களமாடிய மாவீரர்களை வணங்குவோம்!
தியாக தீபங்களின் நினைவைப் போற்றுவோம்!— TVK Vijay (@TVKVijayHQ) November 27, 2025
