Home சினிமா சூர்யாவை டிரோல் செய்வோருக்கு நான் சொல்வது.. இயக்குநர் அதிரடி பேச்சு

சூர்யாவை டிரோல் செய்வோருக்கு நான் சொல்வது.. இயக்குநர் அதிரடி பேச்சு

0

சூர்யா

கடந்த ஆண்டு மகாராஜா மற்றும் விடுதலை 2 ஆகிய இரண்டு ஹிட் படங்களை கொடுத்த விஜய் சேதுபதி, அடுத்ததாக தலைவன் தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அனல் அரசு இயக்கத்தில் பீனிக்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து முடித்திருக்கிறார். இப்படம் ஜூலை 4 – ம் தேதி வெளியானது.

அதிரடி பேச்சு 

இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழாவில் பீனிக்ஸ் பட இயக்குநர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” பீனிக்ஸ்’ படம் சூர்யாவுக்காக மட்டும் எடுக்கப்பட்டது கிடையாது. சூர்யா மீது குற்றச்சாட்டு கூறுவோருக்கும், அவரை விமர்சித்து டிரோல் செய்வோருக்கும் நான் சொல்லிக்கொள்வது.

‘நீங்கள் சூர்யாவின் வாழ்க்கையில் மட்டும் விளையாடவில்லை, இந்த படத்தின் மூலமாக புதிதாக சினிமாவில் எட்டிப்பார்த்துள்ள அனைவரது வாழ்க்கையிலும் விளையாடுகிறீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.   

Source: https://cineulagam.com/article/vijay-sethupathi-son-movie-trolls-1752304268

NO COMMENTS

Exit mobile version