Home இலங்கை அரசியல் ரணில் மீது கிராம மக்கள் வைத்துள்ள நம்பிக்கை

ரணில் மீது கிராம மக்கள் வைத்துள்ள நம்பிக்கை

0

 ரணிலால்(ranil wickremesinghe) மட்டுமே நாட்டை மீட்க முடியும் என கிராம பகுதி மக்கள் நம்ப ஆரம்பித்துள்ளனர். ரணிலின் முக்கியத்துவம் உணரப்பட்டுவருகின்றது என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன(rajitha senaratne) தெரிவித்தார்.

தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

தேசிய மக்கள் சக்திக்கு நன்றாக அரசியல் செய்ய தெரியும்

” அரசாங்கத்தை நிர்வகிக்க முடியாவிட்டாலும் தேசிய மக்கள் சக்திக்கு நன்றாக அரசியல் செய்ய தெரியும். இவர்களால் ஆட்சியை கொண்டுநடத்த முடியாது என்பது மக்களுக்கு தெரியும்.

மீண்டெழுந்து வரும் ஐ.தே.க

வீழ்ந்த கட்டத்திலும் பார்க்க தற்போது ஐக்கிய தேசியக் கட்சி சிறந்த நிலையில் உள்ளது.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்தில் போட்டியிடுகின்றமையும் விசேட அம்சமாகும். எனவே, உள்ளுராட்சிசபைத் தேர்தலில் சிறந்த பெறுபேறு கிட்டும் என நம்புகின்றோம்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் வரவேற்பு உள்ளது. ஏனெனில் மொட்டு கட்சி வாக்குகளே தேசிய மக்கள் சக்தியை சென்றடைந்தது. அந்த வாக்கு தற்போது மொட்டு கட்சி பக்கம் திரும்பி வருகின்றது.” என்றார்.     

 

NO COMMENTS

Exit mobile version