Home இலங்கை சமூகம் பெண்களுக்கு எதிரான வன்முறை : பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம்

பெண்களுக்கு எதிரான வன்முறை : பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம்

0

சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான இடம்பெறும் வன்முறைகளை தடுக்க வேண்டும் என பெண்கள் அமைப்பினர் சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக குறித்த எதிர்ப்பு போராட்டமானது இன்றையதினம் (03.10.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம்

கொழும்பு ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக பெண்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், பிரதமரிடம் கடிதம் ஒன்றையும் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது உரையாற்றிய சமூக ஆர்வலர் சட்டத்தரணி நிமல்கா பெர்னாண்டோ, சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக பிரதமரிடம் கடிதம் ஒன்றை கையளித்ததாக தெரிவித்தார்.

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை  (Chandrika Kumaratunga) இலக்கு வைத்து சமூக ஊடகம் ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் குறித்தும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/violence-against-women-protest-erupts-in-front-1727949450

NO COMMENTS

Exit mobile version