Home இலங்கை சமூகம் வாக்காளர் அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

வாக்காளர் அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

விநியோகத்திற்கான விசேட தினங்களாக ஒக்டோபர் 27 மற்றும் நவம்பர் 3 ஆம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையாளர் நாயகம் (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (23) கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் அட்டை விநியோகம் 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் சனிக்கிழமை தபால் நிலையத்திற்கு வழங்கப்படும்.

நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்டச் செயலாளர் அலுவலகங்களில் பொதுத்தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்காளர் அட்டைகளை வழங்கும் பணிகள் இன்று இடம்பெற்று வருகின்றன.

தபால் மூல வாக்காளர் விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கை 759,210 ஆகும்.

அவற்றில் 21,160 நிராகரிக்கப்பட்டன.

இதன்படி 738,050 பேருக்கு தபால் மூல வாக்களிப்பிற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version