Home இலங்கை சமூகம் பலத்த மின்னல் தொடர்பில் செம்மஞ்சள் எச்சரிக்கை

பலத்த மின்னல் தொடர்பில் செம்மஞ்சள் எச்சரிக்கை

0

மேற்கு, சபரகமுவ, தெற்கு மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் கடுமையான மின்னலுக்கான செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று (09) நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.00 மணிவரையில் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியக்கூறுகள்

மேற்குறித்த இடங்களில் மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னலினால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.   

NO COMMENTS

Exit mobile version