Home இலங்கை அரசியல் நாட்டை திவாலாக்கிய அனுபவம் எமக்கு இல்லை : தேசிய மக்கள் சக்தி

நாட்டை திவாலாக்கிய அனுபவம் எமக்கு இல்லை : தேசிய மக்கள் சக்தி

0

Courtesy: Sivaa Mayuri

தேசிய மக்கள் சக்தி, மக்கள் ஆணையுடனும் சமூக ஒப்பந்தத்துடனும் செயல்படவுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரசூரிய, இன்று முதல் அதற்கான வேலைகளை தேசிய மக்கள் சக்தி ஆரம்பிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் அனுபவம்

புதிய அரசாங்கத்தின் அனுபவம் பற்றி வினவியபோது, ​​”நாட்டை திவாலாக்கிய அனுபவம் தங்களுக்கு நிச்சயமாக இல்லை என்று அவர் பதிலளித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டைக் கட்டியெழுப்புவதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனுபவத்தைப் பெறும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version