Home இலங்கை சமூகம் யாழில் வீடொன்றில் இருந்து கூரிய ஆயுதங்கள் மீட்பு

யாழில் வீடொன்றில் இருந்து கூரிய ஆயுதங்கள் மீட்பு

0

யாழ்ப்பாணம் (Jaffna) – ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று (24) காலை வீடொன்றில் நடத்தப்பட்ட
சோதனையின் போது குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வீட்டில் ஐந்து வாள்கள் உள்ளிட்ட எழு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக
நபர்கள் எவரும் கைது செய்யப்பட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

ஊர்காவற்துறை (Kayts)  காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வன்முறையில் ஈடுபடுவதற்கு தயாராக குறித்த ஆயுதங்கள் மறைத்து
வைக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வீட்டில் வசித்த சந்தேக நபர் தலைமறைவான நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version