Home முக்கியச் செய்திகள் மாற்றமடையும் வானிலை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மாற்றமடையும் வானிலை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை மார்ச் 10ஆம், 11ஆம் திகதிகளில் தற்காலிகமாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது. 

திணைக்களம் இன்று (09.03.2025) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிதளவு மழை

குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இடைக்கிடையில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இன்று (09.03.2025) இரவு கிழக்கு கடலோரப் பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். 

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

காலை வேளையில் நாடு முழுவதும் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version