Home இலங்கை சமூகம் நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை

0

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுலதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது  

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (23.12.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பனிமூட்டமான நிலை

இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேநோம் நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் கொழும்பு, களுத்துறை, பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version