Home உலகம் பிரித்தானியா – நோர்தம்ரன் பகுதியில் இடம் பெற்ற தமிழர் விளையாட்டு விழா

பிரித்தானியா – நோர்தம்ரன் பகுதியில் இடம் பெற்ற தமிழர் விளையாட்டு விழா

0

பிரித்தானியாவில் (United Kingdom) நோர்தம்ரன் பகுதியில் நோர்தம்ரன் தமிழ் விளையாட்டு கழகம் மற்றும் நோர்தம்ரன் தமிழ் கல்விக்கூடம் இணைந்து நடத்திய விளையாட்டு விழா வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது கடந்த 29ஆம் திகதி caroline chisolm பாடசாலையில் காலை நடைபெற்றுள்ளது.

கிராமிய விளையாட்டுகள் 

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நோர்தம்டன் மேஜர் கலந்து சிறப்பித்தித்துடன் ஐக்கிய இராச்சிய தேசிய கொடியையும் ஏற்றி வைத்துள்ளார்.

இந்த விளையாட்டு நிகழ்வில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், கரப்பந்தாட்டம் மற்றும் பெரியவர்களுக்கான கிராமிய விளையாட்டுகள் என்பன நடை பெற்றதுடன், வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள்
பணப் பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விளையாட்டு போட்டி பிரித்தானியாவில் முதல் தடவையாக நடைபெற்றதோடு, நிகழ்விற்கான நிதி பங்களிப்பினை நோர் தம்டன் தமிழ் வர்த்தகர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version