Home இலங்கை ஈழத் தமிழர்களுக்கு நடந்தது என்ன : ஈரானுக்கு நடக்கப் போவது என்ன..!

ஈழத் தமிழர்களுக்கு நடந்தது என்ன : ஈரானுக்கு நடக்கப் போவது என்ன..!

0

ஈரான் மீது கடந்த மாதம் 28 ஆம் திகதி போரை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம், அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை படுகொலை செய்தது.

அதைத்தொடர்ந்து வளைகுடா பிராந்தியம் முழுவதும் மூண்டுள்ள போரில் ஈரானில் 1,400இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதில் அரசு மற்றும் ராணுவத்தின் முக்கிய தலைவர்களும் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில் ஈழத் தமிழர்களுக்கும் இந்த விவகாரத்திற்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கு ராஜபக்ச அரசாங்கம் இழைத்தது இன அழிப்பு. ராஜபக்ச அரசு சர்வதேச அரசுகளின் அனுசரணையோடு இலங்கையில் மேற்கொண்டது ஒரு இனப்படுகொலை.

ஆனால், ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஈரானை
இஸ்ரேல் தாக்கும் போது அங்குள்ள ஈரானியர்களிடம் அமெரிக்க எதிர்ப்பு நிலை வந்து விடக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி….

Source: https://tamilwin.com/article/what-happened-tamils-eelam-what-is-going-to-iran-1773961900

NO COMMENTS

Exit mobile version