Home சினிமா கட்டப்பா பாகுபலியை கொல்லாமல் விட்டிருந்தால்.. 10 வருடம் கழித்து ட்விஸ்டை சொன்ன நடிகர்

கட்டப்பா பாகுபலியை கொல்லாமல் விட்டிருந்தால்.. 10 வருடம் கழித்து ட்விஸ்டை சொன்ன நடிகர்

0

10 வருடங்களுக்கு முன்பு ராஜமௌலியின் பாகுபலி முதல் பாகம் படம் ரிலீஸ் ஆன போது அதன் இறுதியில் ‘கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்’ என்ற கேள்வி தான் பெரிய அளவில் பேசப்பட்டது.

அது தான் பாகுபலி 2ம் பாகத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

கொல்லாமல் விட்டிருந்தால்

பாகுபலி படம் வெளியாகி 10 வருடங்கள் ஆவதை சமீபத்தில் பார்ட்டி வைத்து படக்குழு கொண்டாடி இருந்தது. அதில் பிரபாஸ், ராணா உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் பாகுபலி படத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் ‘ஒருவேளை கட்டப்பா பாகுபலியை கொலை செய்யவில்லை என்றால் என்ன நடந்திருக்கும்’ என கேள்வி கேட்டிருக்கின்றனர்.

அதற்கு பதில் அளித்த ராணா “நான் கொன்று இருப்பேன்” என குறிப்பிட்டு இருக்கிறார். பதிவை நீங்களே பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version