Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய கருத்து கணிப்பு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய கருத்து கணிப்பு

0

ஜனாதிபதி தேர்தல் (2024 Sri Lanka elections) தொடர்பிலான புதிய கருத்து கணிப்பொன்று வெளியாகியுள்ளது.

அதில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் முன்னணி கருத்து கணிப்பு நிறுவனமான நம்பர்கள் டொட் எல்.கே (numbers.lk/)என்ற நிறுவனம் இந்தக் கருத்து கணிப்பை முன்னெடுத்துள்ளது.

கருத்துக் கணிப்பு

இந்த கருத்துக் கணிப்பின் பிரகாரம், ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு  34.5 வீத ஆதரவு காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, 32.4 வீத ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) இரண்டாம் இடத்தினை வகிப்பதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு (Sajith Premadasa) 31.5 வீத ஆதரவு காணப்படுவதாக மேலும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச பெற்றுக்கொள்ளக்கூடிய வாக்குகள் தொடர்பில் இந்த நிறுவனம் சரியான எதிர்வு கூறல்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/who-s-leading-in-the-latest-election-polls-1726194745

NO COMMENTS

Exit mobile version