Home இலங்கை பொருளாதாரம் சம்பள அதிகரிப்புக்காக உயருமா வற் வரி! மஹிந்த சிறிவர்தன விளக்கம்

சம்பள அதிகரிப்புக்காக உயருமா வற் வரி! மஹிந்த சிறிவர்தன விளக்கம்

0

Courtesy: Sivaa Mayuri

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு கோரிக்கைகளை பூர்த்தி செய்ய தற்போதைய பெறுமதி சேர் வரியை 18இலிருந்து 20 – 21 வீதமாக உயர்த்துவது அவசியமாகும் என திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன (Mahinda Siriwardane) இன்று (08.07.2024) அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்துள்ள சிறிவர்தன, இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அரசாங்கம் இல்லை எனவும், அவ்வாறு செய்வது பொது மக்களுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கான கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

வரவுசெலவுத் திட்டம்

இந்தநிலையில், சம்பள ஏற்றத்தாழ்வுகள் குறித்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 2025 வரவுசெலவுத் திட்டம், பொதுச் சேவைகளின் சம்பளத்தை திருத்துவது குறித்து பரிசீலிக்கும் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

Source: https://tamilwin.com/article/will-vat-be-increased-to-convince-trade-union-1720454534

NO COMMENTS

Exit mobile version