கொழும்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதனால், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு எதிராக பிடி விராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விமல் மீதான குற்றச்சாட்டு
இந்த உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் இஸுரு நெத்திகுமார் வழங்கியுள்ளார்.
விமல் வீரவன்ச மீது, தேசிய சுதந்திர முன்னணிக்கு ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட 40 அரசு வாகனங்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனால் அரசாங்கத்திற்கு சுமார் 90 இலட்சம் ரூபாய் நிதி நஷ்டம் ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
