Home இலங்கை அரசியல் மில்லியன் கணக்கில் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்துள்ள விமல் வீரவன்ச

மில்லியன் கணக்கில் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்துள்ள விமல் வீரவன்ச

0

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச(Wimal Weerawansa) தனது நற்பெயருக்கு ஏற்பட்ட சேதத்திற்காக 1,000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த வழக்கானது நேற்றையதினம்(12) குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் இருவருக்கு எதிராகவே தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது காரணமின்றி குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

வழக்குத் தாக்கல்

2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி வெளிநாடுகளில் நடைபெறவிருந்த மாநாடுகளில் பங்கேற்பதற்காக டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்தேன்.

இதன்போது, வெளிநாடு செல்வதற்காக இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்கியதாகவும், அங்குள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் அதை சரிபார்த்து அது செயலற்ற கடவுச்சீட்டு என அறிவித்ததாகவும் முறைப்பாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் எவ்வித நியாயமான காரணமும் இன்றி கைது செய்து நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினார்கள்.

நற்பெயருக்கு களங்கம்

பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டேன்.இதனால் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நியாயமான விசாரணை நடத்தாமல், தீங்கிழைக்கும் வகையில் கைது செய்து, வழக்குப்பதிவு செய்ததன் மூலம் தனது நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்திற்காக பிரதிவாதிகளிடமிருந்து 1,000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version