Home முக்கியச் செய்திகள் சிதறிய விமல் வீரவன்ச அணி

சிதறிய விமல் வீரவன்ச அணி

0

நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி கட்சி போட்டியிடாது என அதன் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச (Wimal Weerawansa) கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

குறித்த விடயம் கடந்த (10.10.2024) ஆம் திகதி விமல் வீரவன்சவினால் வெளியிடப்பட்ட விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய சுதந்திர முன்னணியை பிரநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மொஹம்மட் முஸம்மில், நிமல் ஜயதிஸ்ஸ மற்றும் ஜகத் பிரியங்கர ஆகியோர் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி

இம்மூவரும் ஐக்கிய தேசியக் கட்சி (United National Party) தலைமையிலான கூட்டணியில் போட்டியிடவுள்ளனர்.

மொஹம்மட் முஸம்மில் தேசியப் பட்டியலிலும் நிமல் பியதிஸ்ஸ நுவரெலியா மாவட்டத்திலும், ஜகத் பிரியங்கர புத்தளம் மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளனர்.

இந்நிலையில், தேசிய சுதந்திர முன்னணியில் கடந்த நாடாளுமன்றைத்தை பிரதிநிதித்துவப்படுத்திய காமினீ வலேபொட சர்வஜன பலய கட்சியின் தேசியப் பட்டியலில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

Source: https://ibctamil.com/article/wimal-weerawansa-party-contecst-election-1728886107?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version