Home முக்கியச் செய்திகள் மத வழிபாட்டுத் தலங்களிலிருந்து படையினரை விலக்கும் தீர்மானம் : வெளியான அறிவிப்பு

மத வழிபாட்டுத் தலங்களிலிருந்து படையினரை விலக்கும் தீர்மானம் : வெளியான அறிவிப்பு

0

நாட்டிலுள்ள ஆலயங்கள், மத வழிபாட்டுத்தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் இருந்து படையினரை விலக்கிக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகும் தகவல்களை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.

ஆலயங்களினதும் ஏனைய வழிபாட்டுத்தலங்களினதும் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினரை விலக்கிக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறானவை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

படையினரின் பாதுகாப்பு 

இந்த நிலையில் அவ்வாறான தீர்மானங்கள் எவற்றையும் எடுக்கவில்லை என அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை என பாதுகாப்பு அமைச்சு (Ministry of Defence) மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் முக்கிய சமய நிகழ்வுகளின் போது மத வழிபாட்டுத் தலங்களில் படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/withdrawal-of-soldiers-from-places-of-worship-1730626953?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version