Home இலங்கை குற்றம் பொலிஸாரை மிரட்டிய பெண்! இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி

பொலிஸாரை மிரட்டிய பெண்! இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி

0

அழகு நிலைய ஊழியரான பெண்ணொருவர் வதுரம்ப பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயதுடைய குறித்த பெண் நேற்று(07.06.2025) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றச்செயல் ஒன்றிற்காக, தேடப்பட்ட சந்தேகநபர் அவரது நண்பரின் வீட்டில் இருப்பதாக வதுரம்ப பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்

இதனையடுத்து அவரை கைது செய்யச் சென்ற அதிகாரிகளை அச்சுறுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கைது செய்ய வந்த பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டுக்காக அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version