Home இலங்கை குற்றம் கிளிநொச்சியில் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

கிளிநொச்சியில் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

0

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விநாயகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட மாகாண போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம்(9) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து ஏழு கிராம் 750
மில்லி கிராம் ஜஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version