Home முக்கியச் செய்திகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண்ணொருவர் கைது : முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண்ணொருவர் கைது : முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை

0

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்  நேற்று (28) அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் மில்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது நடவடிக்கை

சந்தேகநபர் அபுதாபியிலிருந்து இன்று (28) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேகநபர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 11,200 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 56 சிகரட் காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version