Home இலங்கை சமூகம் யாழ். பொம்மைவெளி பகுதியில் கோர விபத்து – குடும்பப் பெண் பரிதாபமாக பலி

யாழ். பொம்மைவெளி பகுதியில் கோர விபத்து – குடும்பப் பெண் பரிதாபமாக பலி

0

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பப் பெண் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

குறித்த கோர விபத்து இன்றையதினம் (20.12.2025) யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மூளாய் பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம்
நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

மேலதிக விசாரணை

இதன்போது எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார்
சைக்கிள் ஒன்று முந்தி செல்ல முற்பட்ட வேளை நிலைகுலைந்த தாயும் மகளும் மோட்டார்
சைக்கிளுடன் நடு வீதியில் விழுந்தனர்.

இதன்போது எதிர் திசையில் வந்த கலி பவுசர் அந்த தாயின் தலையின் மீது ஏறி விபத்து
சம்பவித்துள்ளது.

இதன்போது சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version