புத்தளத்தில் (Puttalam) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் மாரவில, மரந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் முன்னாலிருந்த பெண் ஒருவரே இவ்வாறு சுட்டுகொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் அருகில் இருந்த பத்து வயதான பிள்ளையும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
